செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காவலர்

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திம்மாம்பேட்டை காவல்துறையினர், 16.4.2020 வியாழனன்று கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட திகுவாபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (எ) பாப்பம்மாள் 35 எனும் பெண்ணை சாராய பாக்கெட் விற்பனை செய்யும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். பையில் மறைத்து வைத்திருந்த 100 பாக்கெட் சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிருபரிடம் எழுத்தராக பணிபுரியும் பிரபாகரன் (பொறுப்பு) எனும் காவலர் சரியான விளக்கம் அளிக்க மறுத்து காத்திருக்கும்படி செய்தியாளரை அமரச்செய்தார். செய்தியாளரிடம் நடந்துகொண்ட விதமும் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டார். சமுதாயத்தில் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறைக்கு காவல்துறை நண்பர் அளிக்கும் மரியாதை இதுதானா? கொரோனா பீதிக்கு நடுவிலும் அல்லும் பகலும் மக்களுக்காக உழைக்கும் மற்ற காவலர்களுக்கும் இது போன்ற சிலரின் நடத்தையால் கன்னியக்குறைவு ஏற்படுகிறது.


- மோகன், திருப்பத்தூர்


Popular posts
தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
Image
தாகம் தீர்ப்பாரா அமைச்சர்! ஏக்கத்தில் மல்லகுண்டா ஊராட்சி மக்கள்!
Image
நாட்றம்பள்ளி அருகே வனப்பகுதி ஆக்கிரமிப்பு மீட்டுத்தரக்கோரி போராட்டம்
Image
கொரோனா தடுப்பூசி மருந்து உருவாக்குதல், மருந்து கண்டுபிடிப்பு, நோய்க்குறி அறிதல், பரிசோதனைக்கான பணிக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ‘இல்லம் திரும்புவோம்’ என்ற திட்டத்தின் கீழ் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 1565 சிறப்பு ரயில்கள் மூலமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இல்லம் திரும்பினர்
Image